இந்த நூலில் குறிப்பிட்டுள்ள தக்ஷசீலம், அசுவாயனர் நாடு, சிலர் நிஸா என்று அழைக்கும் ஆதி கிரேக்கர் குடியிருப்பான நியாஸா, மஸாகா, முதலிய பல குறுநிலங்களும் சரித்திரத்தில் இருந்தவை. குறிப்புகள், திசைக்குறிப்புகள், அரசியல் நிலவரங்கள் இவற்றுடன் அந்த நாடுகள் இக்கதையில் இணைக்கப்பட்டுள்ளன.
பல பிரபல சரித்திர ஆசிரியர்களின் நூல்களில் கண்ட வரலாற்றுக் குறிப்புகளுடன் இலக்கிய ஆதாரமும் இந்நூலில் இடம் பெறுகிறது. விசாகதத்தன் எழுதிய முத்ரா ராக்ஷசம் என்ற நூலின் இரு பாத்திரங்களான ராட்சஸன், சந்தனதாஸன் இருவரும் இந்த நூலில் இடம் பெறுகிறார்கள். முதன் முதலில் சாணக்கியரைப் பற்றிப் பிரசுரிக்கப் பட்ட ‘சாணக்கிய தந்திரம்’ என்ற கிரந்த நூலின் குறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
உயிருள்ள அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வேகம் ஊட்ட வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, கிரேக்கச் சிலை ஆண்ட்ரி ஆகிய கற்பனைப் பாத்திரங்ளும் இதில் வலம் வருகிறார்கள். இன்பச்சுவை அந்தக்கால நியதிகளுக்கும், பழைய இலக்கிய நியாயத்துக்கும் ஏற்றபடி கையாளப்பட்டிருக்கிறது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.