இந்த வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்தான் ‘மூங்கில் கோட்டை .’ இதில் கதாநாயகன், கதாநாயகி, சித்தர், பாண்டிய சேனாதிபதி ஆகியவர்களைத் தவிர மற்றவர்கள் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இந்தச் சிறு வரலாற்று நிகழ்ச்சியைப் பெரும் கதையாகவும், நவரசங்களும் இணையும்படியாகவும் அமைக்க, கூடியவரை கற்பனையை ஓட்டியிருக்கிறேன்.
இந்த நவீனம் மலேசியா நாட்டின் ‘தமிழ் நேசன்’ பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தது. மலேசிய நாட்டு மக்கள் பெரிதும் ரசித்த இந்த நவீனம் இப்புத்தக வாயிலாகவும் மக்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் வழக்கம்போல் இந்தப் புத்தகத்துக்கும் ஆதரவு தருவார்களென்பதில் ஐயமில்லை.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.