“மலையரசி” எனும் இந்த சரித்திர நாவலின் நிகழ்ச்சிகள் முக்கால்வாசி சரித்திரத்தின் உண்மைச் சம்பவங்கள். ராஜபுதனச் சரித்திரத்தின் பொன்னேடுகளில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இக்கதையில் வரும் பாகுர்ச்சிரா (பக்ஷிகளின் சரணாலயம்) என்ற ஜோடாகிர் (சண்டை மலை) இன்னுமிருக்கிறது. இதில் வரும் ஜோகி சரித்திர பாத்திரம். கதாநாயகன் ராவ்ஜோடா, அவன் தந்தை ரின்மல், மேவாரின் மகாவீரன் சந்தசிம்மன், அவன் புதல்வர்கள் காந்தாஜி, மஞ்ஜாஜி அனைவரும் சரித்திர பாத்திரங்கள். பிருமச்சாரி ஹர்பா சங்க்லா , குதிரை வளர்ப்பவரும் மகா வீரருமான பாபுஜிஎல்லோரும் சரித்திரத்தில் ஜீவிக்கிறார்கள்.மலை அரசி ஒருத்திதான் கற்பனைப் பாத்திரம்…
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.