ரூபலா கோபமாய் விஷ்ணுவிடம் திரும்பினாள். ”விஷ்ணு...! உன்னோட பாஸை என்ன பண்ணலாம்?” ”ஒண்ணும் பண்ண முடியாது மேடம்... என்னோட பாஸைப் பத்தி எனக்குத் தெரியும். அவர் ஒரு விஷயத்துல முடிவு எடுத்தார்னா எடுத்ததுதான். அதுக்கப்புறம் ஐ.நா. சபையே தலையிட்டு வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டார். 'நீங்க அவரோட நெற்றியில் ரத்த திலகம் இட்டு... வேண்டாம்... ஒரு குங்குமப் போட்டு வெச்சுப் போர்க்களத்துக்கு சாரி... ரெஸ்டாரண்ட்டுக்கு அனுப்பி, வையுங்க... அதுக்கப்புறம் அவர் திரும்பி வர்ற வரைக்கும் கந்தர் சஷ்டி படிங்க.
விவேக் புன்னகைத்தான். “அது அழைப்பு இல்லை பாஸ், விபத்தம்!” ”மே... பி... இது ஒரு ஆபத்தான விளையாட்டுத்தான். எதிரி விளையாடக் கூப்பிடறான்.” ”போய் விளையாடுங்க பாஸ். இனி ஆட்டம் உங்க கையில்.”
விவேக், இனி ஆட்டம் உன் கையில்! & விவேகம் 41 நிமிஷங்களும் – ராஜேஷ் குமார் – ஆர்.கே. பதிப்பகம் – நாவல்