5.05 லாலி ரோடு. 5.10 வடவள்ளி . '5.20 மருதமலையில் டாக்ஸி நின்றது. இறங்கினார்கள். குளிருக்கு உள்ளங்கைளைத் தேய்த்துக் கொண்டார்கள். “டிரைவர்! டிக்கியைத் திறந்து விடுங்க.. ஆளுக்கொரு அயிட்டத்தை எடுத்துக்கட்டும்” என்று பாட்சா சொல்லிக் கொண்டே டாக்ஸிக்குப் பின் பக்கமாய்ப் போக, அந்த வித்தியாசத்தை சட்டென்று உணர்ந்தான். இருட்டு கரையாத அந்த விடிகாலை வேளையில்..... கொஞ்சம் தள்ளி..... மாருதி கார் ஒன்று தெரிய, அதனருகே நான்கைந்து பேர் மசமசவென்று தெரிந்தார்கள்.
பேச்சொலிகள். உற்றுப் பார்த்தான் பாட்சா, முதுகுத் தண்டுவடத்தின் முக்கிய நரம்பில் உறைந்தான். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருடன், வாசுமதியின் அப்பா ராகவேந்திரனும் அம்மாக்காரி சௌந்திரமும் தெரிந்தார்கள்.
19 வயது சொர்க்கம் & யமுனாவின் 48 மணிநேரம் – ராஜேஷ் குமார் – ஆர்கே பதிப்பகம் – நாவல்