ஞான நூல்களில் விருப்பு கொண்டோர் காகபுசுண்டர் பெரு நூல் காவியத்தைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் ஞான நூல்களுக் கெல்லாம் அச்சாணி போன்றது இந்நூல்!
காகபுசுண்டர் யுகங்கள் பல கண்டவர்! எத்தனையோ பிரணயங்களைப் பார்த்தவர்! ஸ்ரீராம பிரானின் குருவான வசிஷ்ட முனி வருக்கு உபதேசித்தவர்! அவருடைய பெருமையை எடுத்துரைக்க இயலாது.
சித்தர்களின் பாடல்கள் இன்று கிடைக்கும் உருவத்தை அடைதற்கு முன் எத்தனையோ தலை முறைகளில் எத்தனையோ பேர்களால் எத்தனையோ காரணங்களுக்காக அறிந்தும் அறியாமலும் சிதைக்கப் பட்டே நமக்குக் கிடைத்துள்ளன என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு சிதைக்கப் பட்டதன் காரணம் அதிகமான அளவு பயன்படுத்தப் பட்டதே! எல்லோராலும் பயன் படுத்தப்பட்டதே! பண்டிதர்களால் மட்டு மின்றி பாமரர்களாலும் பயன் படுத்தப்பட்டதே
தமிழின் முப்பெரும் பிரிவுகளான சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சித்தர் இலக்கியம் இவற்றில் சங்க இலக்கியங்கள் புலவர் பெருமக்களையும், சமய இலங்கியங்கள் மடாலயங்களையும் சரணடைந்து விட்டபின் எஞ்சிய சித்தர் இலக்கியம் பட்டி தொட்டிகளிலும் நாட்டுப் புறங்களிலும் வசித்த ஏழைப் படிப்பாளிகளால் மட்டுமே ஆதரிக்கப் பட்டது
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.