குழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது.
இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்கமாக உதாசீனப்படுத்தும் ஒரு தலைமுறையில் மரபை உள்வாங்கிக்கொண்டு அதைத் தன் கவிதைகள் சிலவற்றில் வெற்றிகரமாக உருமாற்றியிருக்கிறார் கார்த்திக் நேத்தா.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.