நூலை முதலாவதாக வாசித்தவன் என்கிற அடிப்படையில், அதே ஆத்மசுத்தியுடன் சொல்கிறேன், “தனிமனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை புத்தகங்களுக்கு இருப்பதாக நாம் நம்புவது உண்மைதான் என்றால், உத்தரவாதமாக இந்தப் புத்தகம் பலருடைய வாழ்க்கையை அசைக்கும். உள்ளுக்குள் உள்ள கோழைத்தனத்தைப் பிடறியைப் பிடித்து வெளியே தூக்கிக்கொண்டுவந்து வீசும். ஒவ்வொரு மனிதரிடத்திலும் உள்ள நீதியுணர்வைக் கம்பீரமான செயல்பாடு நோக்கி நகர்த்தும்!”
– சமஸ்
சந்துரு எனும் தனிமனிதரின் வாழ்க்கைக் கதை அல்ல இது; சமகால இந்திய வரலாற்றின் ஒரு சிறுபகுதி. நமக்கு ஒருபோதும் திறக்கப்படாத கதவுகளை இந்நூல் வழி திறக்கிறார் சந்துரு. இந்திய நீதித் துறையில் முன்னுதாரணம் இல்லாத ஒரு புத்தகமாக இது இருக்கும்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.