பால்ய வயதைக் கடப்பதென்பது, ஒரு சிலருக்கு பூவரசமரத்தடியையும், சிமென்ட்பெஞ்சுகளையும் கடந்து செல்லும் ரயில்வண்டிபோல கவிதைத்தனமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு காற்றில் லயத்தோடு உதிரும் இலையைப் போல இயல்பாக இருக்கிறது. மிகப் பலருக்கு பென்சில் சீவும்போது உதிரும் மரச்சுருள்களைப்போல வலியுடன் இருக்கிறது.
மனம், ஒரு மாய சிலேட்டுப்பலகை. குழந்தைப் பருவத்தில் அதில் எழுதப்பட்டவற்றை மறுபடியும் அழித்து எழுத எந்தக் கோவை இலைகளும் கிடைப்பதில்லை. கனிகளுக்குள் முழு மரத்தின் சாரமும் அடங்கியிருப்பதைப்போல குழந்தைப்பருவத்தில்தான் நம் முழு வாழ்க்கையின் சாரமும் ஒளிந்திருக்கிறது.
பால காண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றி விட்டாலும் மணலுக்கடியில் அந்த நதி ஓடிக்கொண்டுதான் இருக்கும்!
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.