கடின உழைப்பிலிருந்து ஆசிரியரை வேறு பாதைக்குத் திருப்பச் சிறு கதை உதவுகிறது. வெளியிடச் சிறந்ததோ இல்லையோ, எப்படி இருந்தாலும் நாவல் எழுத நிறைய உழைப்புத் தேவைப்படும். அதை அறுபதாயிரத்திற்கும் ஒரு லட்சத்திற்கும் இடையேயான வார்த்தைகளில் எழுதுவதற்கு ஒரு முனைப்படுத்தப்பட்ட கவனம், குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு காலம் தேவைப்படுமாதலால் இது முதலில் ஒருவரை அச்சுறுத்தும். என்னுடைய நாவல்கள் இக்கால அளவு கோல்களின்படி சிறியவைதான் என்றாலும், ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது பல மாதங்களுக்கு அந்த ஒரு வேலையிலேயே அடைபட்டிருப்பதாக ஒரு எண்ணம் தோன்றி, என் மனதில் உளைச்சலையும் சஞ்சலத்தையும் உண்டாக்கும். அந்த மாதிரிச் சமயங்களில் ஒருவரது மனம் வாக்கியங்களிலேயே உழன்றுகொண்டிருக்கும்; கடைசியாக எழுதிய வாக்கியம் அல்லது அடுத்து எழுதப்போகும் வாக்கியம் மற்ற எல்லாச் சப்தங்களையும் அர்த்தங்களையும் மனதில் தடுத்துக் காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டிருக்கும். முதல் பிரதி உருவான பிறகு மனம் லேசாகிவிடும்; ஆனால், சுமையை இறக்கிய பிறகு இந்த மனநிலை கொஞ்ச காலம்தான் நீடிக்கும். ஏனென்றால், முதல் பிரதியை அடுத்து இரண்டாவது பிரதி, அப்புறம் மூன்றாவது பிரதி, பின் நான்காவது பிரதி என்று முழுத் திருப்தி (இது ஒரு கானல் நீர்) கிடைக்கும்வரை இது தொடரும். பிறகு திடீரென்று ஒருநாள் ஆசிரியர் எழுத்துப் பிரதியை முடித்தெடுத்துத் தன்னுடைய இலக்கியத் தரகருக்குத் தபால் மூலம் அனுப்ப முடிவு செய்வார் .
மால்குடி
₹395.00
SKU:
10774
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2019 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 367 |
எடை | 450 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2019 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 367 |
எடை | 450 |
மொழி |
“மால்குடி” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.