எல்லா வடிவங்களுக்குமான ஆதி நிலை அணு, உணர்வாகிய மூலத்தில் சிவத்தின் இயக்கத்தை சக்தி தணிக்கையில் வெளிப்படுவன அணுக்கள். இவ்வணுக்கள் மூல அணுக்கள், கோல அணுக்கள் ஆகிய இரு நிலைகளாக உள்ளன. கோல அணுக்களின் சேர்க்கையே ஆகாயம் முதலான பூதங்களாகின்றது. அணுக்கள் பிறக்கும் முன், எண் பிறக்கிறது. இவ்வெண்ணாகிய எண்ணிக்கையே அணுக்களின் வடிவத்தினை அமைக்கிறது. அணுக்களின் உள்ளிருந்தே ஒளி, ஓசை ஆகியன வெளிப்படுகின்றன.அணுவியல், எண்ணியல், ஒளி மற்றும் ஓசையியல் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்.
அணு முதலாக அண்டங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை அணுத்தேற்றம் எனும் கொள்கையின் வழியே
பதிவு செய்கிறது இந்நூல். ஆகாயத்திற்கு எல்லை உண்டு, காலம் பல்வேறு நிலைகளில் உள்ளது, காலம் வளையும் தன்மை கொண்டது
ஆகியன இந்நூலின் செறிவான உள்ளடக்கம். தமிழ் மரபின் இறையியலே மெய்யியலின் மூலம். அம்மையப்பரே ஆசானாக உணர்த்திய கருத்துகளின் பதிவு வடிவு நூல் எனும் இவ்வாக்கம்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.