காஞ்சி எவ்வளவோ பெருமைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல ஒவ்வொரு கல்லும் சரித்திரம் பேசுகிறது.சரித்திரம் படிப்பதையே நிறுத்திவிட்ட அடுத்த தலை முறையினர், தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த சோழர்களையும், பாண்டியர்களையும், பல்லவர்களையும் இழிவாகப் பேசி வருவது வருத்தத்திற்குரியது.
எனவேதான்வருங்காலத் தலைமுறையினர், சரித்திரத்தை புதினங்களின் வாயிலாகவாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் எனது எழுத்துப் பணியைத் துவக்கினேன். வானதி பதிப்பகம் டாக்டர் இராமநாதன் அவர்கள் தனது பதிப்பகத்தை சரித்திர இரதமாகவே மாற்றிவிட்டார். அந்த இரதத்தின் சாரதியாக அவரது நண்பர் திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் திகழ்கிறார். பல புதிய சரித்திர எழுத்தாளர்களை இவர்கள் இருவரும் அறிமுகம் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.