இந்த பூமியில் நமக்கு நண்பர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். தீங்கு செய்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு பூச்சி, ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு தொட்டுத்தாவிப் போகும் போது தான் மகரந்தம் சூல்முடியுடன் சேர்ந்து, அதன் உயிர் விளைவாக ‘விதை’ உருவாகிறது. அப்படியிருக்க, அந்தப் பூச்சி எப்படி நமக்கு எதிரி ஆகும்? இதை பகுத்துப்பார்த்து அறிந்து கொள்ள, எது நம்மோடு போட்டி போடுகிறது ? எது நம்மோடு போட்டி போடவில்லை? என்பது நமக்கு தெளிவாகத் தெரிய வேண்டும். நெல்லைத் தாங்குகிற வைக்கோல், பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிகிறது. ஆனால், அந்த வைக்கோலின் முழு பலத்தை புரிந்து கொள்ளும் போது இந்த உலகம் ஒரு குலுங்கு குலுங்கும்.
மசானபு புகோகாவுடைய இந்த வரிகளை வாசித்த பொழுது, உடம்பெல்லாம் புல்லரித்து எனக்கு ஒருநொடி நிமிர்ந்து உட்கார வேண்டுமெனத் தோன்றியது. இந்த பூமியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்தது!
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.