ஆற்றல் வாய்ந்த அரிய பாடல்களால் திருமூலர் மருத்துவத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் இந்த நூலில் அடங்கியிருப்பதால் இது உயிருக்கு உயிராக வைத்துக் காப்பாற்ற வேண்டிய கருவூலம் எனலாம். தமிழன் இத்தகைய அரிய நூல்களின் பெருமையை மறந்து, தான் மனிதன் என்பதையே மறந்துவிட்ட காரணத்தால் தான் இன்று இத்தகைய அவல நிலைக்கு ஆளாகிக்கிடக்கிறான்.
அறம் உணர்ந்த, ஆற்றல்மிக்க, நெறியும் நேர்மையும் கொண்டு ஒழுகும் ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கும் அறிவுச் சுடர் தமிழகத்தில் மட்டும் தான் தூண்டா விளக்காக இன்னும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விளக்கு மேலும் மேலும் பிரகாச மடையும் என்பதில் ஐயமில்லை .
உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய அறிவும் ஆற்றலும் தகுதியும் தமிழனுக்கு உளது என்பதைப்பறை சாற்றும் நூல் திருமூலர் திருமந்திரம். தமிழன் இதன் பெருமையை உணர்ந்து செயல்படும் காலம் வந்தால் உலகிற்கே உய்வுண்டாம் என்பதில் ஐயமில்லை
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.