தேரையர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்று முடிவு கட்டிவிட்டால் அகத்திய சீடரான தேரையர் என்ன ஆனார். ஒரு வேளை தேரையர் பெயரால் வழங்கும் நூல்கள் பலவும் இந்த பிற்காலத் தேரையர் இயற்றியதே என்று வைத்துக் கொண்டாலும் அகத்திய சீடரான தேரையரைப் பற்றிய வரலாற்றை அடியோடு அழித்துவிட இயலுமா? இங்கே சித்தர்களைப் பற்றிய ஒரு வரலாற்று உண்மையைக் குறிப்பிட விரும்புகிறோம். சித்தர்கள் காலம் கடந்து வாழக்கூடியவர்கள் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து மறைந்து போய் பின்பு மீண்டும் ஒரு காலகட்டத்தில் தோன்றக் கூடியவர்கள். மீண்டும் ஒரு குழந்தையாக பிறந்து வளர்ந்து தம் பூர்வஜென்மப் பணிகளைத் தொடரவும் அவர்களால் முடியும். அதனால் அந்தத் தேரையர் வேறு இந்தத் தேரையர் வேறு என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த நூலில் தேரையர் பல அருமையான மருந்துவ முறைகளைக் கூறியிருக்கிறார். சில இடங்களில் பாடல்கள் சிதைந்து போய் சொற்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத படி உருக்குலைந்து போய்க காணப்பட்ட போதிலும் மொத்தத்தில் நூற்றுக் கணக்கான நல்ல மருந்துகள் இந்த நூலின் மூலம் கிடைக்கின்றன. வீண் சர்ச்சைகளை விடுத்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமை என்று கருதுகிறோம்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.