பறவைகளுக்கு ஊரடங்கு

150.00

SKU: 8078

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பகிர்:

பறவைகளுக்கு ஊரடங்கு புத்தகம் குறித்து ஏ.சண்முகானந்தம்

வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தைப் படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு அறிமுகமான பறவைகள் குறித்த எளிமையான அறிமுக நூலாசிரியர் வழங்கினார்.

சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூரைமாறி (Rosy Starling) குறித்த அனுபவமும், அமூர் வல்லூறு குறித்த கட்டுரையும் இத்தொகுப்பின் முக்கிய கட்டுரையாக அமைந்துள்ளது.

ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமூர் வல்லூறு (அமுர் பால்கன்) தமிழகத்தின் கூந்தங்குளம் பகுதிக்கு வலசை வந்தபோது, நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் மனதில் நிழலாடிச் செல்கின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய அறிமுகக் கட்டுரைகள் மிகவும் அவசியமாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வாழ்விடத்தை இழந்த சூரைமாறிகள் சென்னையின் கிண்டிக்கருகில் இருந்த ஒரு ஆல, அரச மரத்தில் ஆயிரக்கணக்கானவை கூடியிருந்த அழகை காணும் வாய்ப்பை நூலாசிரியர் பெற்றுள்ளார். அந்த அனுபவத்தை நூலை படிக்கும் வாசகனுக்கும் சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

நத்தைக் குத்தி நாரை இரு வேறு கட்டுரைகளில், பல்வேறு தளங்களில் பேசப்பட்டுள்ளது.

ஆந்தைகள், தேவாங்கு மட்டுமின்றி அந்திப்பூச்சிகளைத் தேடியலைந்த அனுபவத்தோடு, மற்றொரு கட்டுரையில் வண்ணப்பூச்சிகளின் உலகில் பயணித்ததையும் நூலாசிரியர் அழகாக அனுபவத்தையும் எளிமையான வடிவத்தில் பதிவு செய்கிறார்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!