போகர் பல இடங்களில் பொன்னாகும் பொன்னாகும் பொன்னாகும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே இந்த அறிவியல் கருத்துக்களை வைத்து முறையாக நாம் ஆராயத் தொடங்கி இருந்தால் இதற்குள் இந்த நாடு முழுவதுமே பொன்னாகப் போயிருக்கும்.
இவ்வளவு அறிவுச் செல்வங்களையும், ஆற்றலையும் வைத்துக் கொண்டும், நாம் அந்நியரால் மதியிலிகள் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடப்பவர்கள் என்று கேவலமாக மதிக்கத்தக்க அளவில் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதனை நினைக்கும் பொழுது வெட்கப்படுவதா, வேதனைப் படுவதா என்று தெரியவில்லை.
பதினான்காம் நூற்றாண்டிலேயே ஒரு ஜெர்மானியர் நமது நாட்டுக்கு வந்தார். தமிழ் கற்றுத் தேறினார். எண்ணற்ற ஓலைச் சுவடிகளை வாரிக் கொண்டு சென்றார். என்பதைக் கேள்விப்படும் பொழுது, அறிவுச் செல்வங்களை அறிந்து கொள்வதற்குக்கூட இயலாதவர்களாக இருந்தோம்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.