உதகம் என்பது ஒருவகை திரவம். நீர்! ஆனால் தண்ணீ ரா என்று கேட்டால் அல்ல. குடிநீர் அல்லது கஷாயம் போல் இலைகள், வேர்கள் முதலிய மூலிகைகளாலான குடிநீரா என்று கேட்டாலும் அல்ல என்பதே பதில். திராவகம்- தீ நீராஎன்று கேட்டாலும் அல்ல அல்ல என்றே கூறவேண்டும். பின் என்ன?
இவை எல்லாவற்றையும் விட மிகவும் வீரியம் வாய்ந்த- ஆற்றல் மிக்க நீர்த்தன்மையில் உள்ள ஒரு பொருள். – மலைகளின் மேல் எங்காவது அபூர்வமாகவே காணப்படுகிறது. இந்த திரவத்தில் ஒரு இலை விழுந்தால் அது ‘கல்லாய்ப்போகும் என்பது ஒன்றே இந்த உதகம் என்ற திரவத்தின் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாகும்.
மலைமேல், கிணறுபோல் மிக ஆழமாக உள்ள குறுகலான குழிகளில் தேங்கிய நீரே உதக நீராயிற்று என்று சித்தர்கள் கருதுகின்றனர். இந்தக் குழிகள் இடிவிழுந்ததால் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வேறு விதமாக அவ்வளவு ஆழமான, ஆழம்காண முடியாத- கிடுகிடு பாதாளக் குழிகள் உண்டாகியிருக்க முடியாது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.