சகல உலகங்களுக்கும் ஈசனாகிய சிவபெருமானும் உமையன்னையும் உலகைச் சுற்றிப் பார்த்தபடி ஒரு காடு வழியாக, வந்து கொண்டிருக்கையில் அடர்ந்த கானகத்தின் நடுவில் ஒரு இடத்தில் ஒரு வேடன் மரத்திலிருந்து கீழே விழுந்து, படாத இடத்தில் அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டு கிடப்பதைக் கண்டார்கள்.
கருணையே வடிவான தாய் அந்த வேடனைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள். உடனே இறைவன் ஒரு மந்திரத்தை உச்சரித்துத் தன்கையிலிருந்த கழியால் வேடனின் உடலில். ஒரு தட்டுத்தட்டினார். அன்னை அவன் முகத்தின் மேல் தண்ணீர் தெளித்தாள். வேடன் உடனே உயிர்பெற்று எழுந்தான்!
வர்மக் கலையின் தோற்றத்தைப் பற்றி வழங்கப்படும் கதை இது. இதனால் மூன்று விஷயங்கள் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. வர்மக் கலையைத் தோற்றுவித்தவர் சித்தர்களின் முதல்வராகிய சிவபெருமானே என்பது ஒன்று.
இரண்டாவது, உடலில் மர்மமான இடங்கள் உள்ளன என்பது. மர்மம் என்ற சொல்லே வர்மம் என்று மருவி வழங்குகிறது. அந்த இடங்களில் அடி உதைபட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும் என்பது.
மூன்றாவது, வர்மக் கலையை உலகுக்கு அளித்த ஈசன், அதை உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலேயே அருளினார் என்பது.
இந்த மூன்றுமே வர்மக் கலையின் அடிப்படையான மிகமுக்கியமான கோட்பாடுகள்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.