அரசுப்பள்ளி தொடங்கி மாண்டசரி வரை பலதரப்பட்ட கல்வி முறைகள் இருக்கின்றன. தொடர்ந்து பாடம் சொல்லித்தரும் முறைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் பாடங்கள் மாறவில்லை. எதைச் சொல்லித் தருகிறீர்கள் என்பதுதான் முதன்மையானது. அது இன்று வரை மாறவில்லை. எப்படிச் சொல்லித்தருகிறீர்கள் என்பது அதற்கும் அடுத்த தேவையே. ஆனால் அதில்தான் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். பரவலாக இன்று இருக்கும் கல்வி முறையில், நாம் கற்றுக்கொள்வது வெறுமனே தொழில்நுட்பங்களை மட்டுமே. அதைக் கொண்டு நிறுவனங்களில் பணியாற்றலாம் அல்லது அந்நிறுவனங்களுக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். இதுவல்ல கல்வி. இருட்டு உலகில் வெளிச்சம் இருக்கும் திசையை இதை விடத் துல்லியமாக உணர்த்த முடியாது. கற்றல் என்னும் இடத்தை விட்டு வெகு தூரம் பயணித்து இருளுக்குள் வந்துவிட்ட சமூகத்துக்குக் கல்வி பற்றிய வெளிச்சத்தை இந்நூல் தருகிறது.
“மரபுத் தொடர்ச்சியும் சமகாலத் தேவையும் பொருந்துபனவற்றை மட்டுமே அறிந்து கொள்ளுங்கள். அதுதான் கல்வி.” இப்படி கல்வி பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையின் ஒவ்வொரு கூறையும் மாற்றியமைக்கிறது மரபுக்கல்வி நூல். தேவை இல்லாத இடத்தில் கொடுக்கப்படும் பொருளும், அறிவும் அகந்தையை வளர்த்தெடுக்கும். ஆகவே தேவையை உணர்ந்து அத்தேவையிலிருந்து அறிதலையும் புரிதலையும் உணர்தலையும் நோக்கிக் குழந்தைகளைக் கொண்டுசெல்லும் பணியை மரபுக் கல்வி செய்யும் என்பதைத் தெளிவாக ”மரபுக்கல்வி” நூல் உங்களுக்கு உணர்த்தும்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.