பிதாமகர்களின் பார்வையில்…
“நிர்வாகத்தில் இருப்பவர்கள் தாங்கள் சந்தித்த சூழல்களையும் மனிதர்களையும் ஆவணப்படுத்துவது எதிர்காலத்தில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு கைவிளக்காக இருக்கும். ஒரே வாசிப்பில் முடித்துவிடுகிற புத்தகம் அல்ல இது. வாசிக்கும்போது அடிக்கோடிட்டு நேசித்த வரிகளை மனதில் பத்திரப்படுத்தி வைக்கும் நூல் இது.”
– வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்
“அருகில் அமர்ந்து கேட்பது போன்ற மொழிநடை. பட்டு நெசவுபோல தகவலையும் அனுபவத்தையும் அழகாக ஒன்றிணைத்து நெய்யும் லாகவம். ஆட்சியாளராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இந்தக் கட்டுரைகள் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்றே சொல்வேன்.”
– எஸ்.ராமகிருஷ்ண ன்
“நூல் நிலைய புத்தகத் தட்டுகளை தவறாமல் நிரப்ப வேண்டிய சிறப்புடைய புத்தகம் இது. வடிவமைப்பு கலைத் திறனாலும், மருதுவின் ஓவியங்களாலும் இது ஏற்றம் பெற்றது. திருமணம், பிறந்தநாள், பள்ளி விழாக்களில் பரிசாகக் கொடுப்பதற்குத் தகுதியானது. வீடுகளிலும், இளைஞர்களின் கைகளிலும் இருக்க வேண்டிய கையேடு.”
– அ.முத்துலிங்கம்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.