இந்த ‘யுகப்புரட்சி’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் ‘ஆனந்த விகட’னில் அவர் மெய்யாசிரியராக விளங்கிய காலத்தில் – 1930ஆம் ஆண்டு களில் – எழுதப்பட்டவை. ராகி, யமன், குகன், வழிப்போக்கன் என்ற பெயர்களிலும் அவர் எழுதினார். இத்தொகுப்பில் 20ஆம் கட்டுரை ‘ஆடல் பாடல்’ கலை விமர்சனப் பகுதியில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் எழுதப்பட்டது.
அவருடைய பேரன்புக்கும், பெரு மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்த ராஜாஜி அவர்கள், ஒன்றிணைந்த சென்னை மாகாணத்தின் ‘பிரதம மந்திரியாக விளங்கிய காலத்துச் சட்டமன்ற, மேல் சபை நிகழ்வுகளைத் தமக்கே உரிய முறையில் ‘நேரடி விமர்சனம்’ செய்து எழுதியிருக்கும் கட்டுரைகள் இன்றைக்கும் ரசித்து சிரித்தவாறே படித்து மகிழதக்கவை அத்துடன் அன்றைக்கு அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவி வந்த நாகரிகமான தோழமை உணர்வையும் படித்து,இன்றைய நிலைமையோடு ஒப்பு நோக்கி பெருமூச்சு விட தோன்றுகிறதே!
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.