அம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :
அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார்.
அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன.சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்கங்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்ற தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே.
அவற்றின் தொகுப்புகளே இந்நூல்…….
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.