புவனேந்திரன் முகத்தில் கோபச் சிவப்புப் பூசிக் கொண்டு திரும்பினான். “சுபமதி...! யாரை வேணும்னாலும் விட்டுடலாம். வீட்ல பூந்து காசு, நகை கொள்ளையடிக்கிறவனை ஆத்திரத்துல கொலை செய்யறவனை இப்படி யாரை வேணும்னாலும் மன்னிச்சு விட்டுடலாம். ஆனால், பெண்களைச் சேதப்படுத்தும் எண்ணத்தோடு ஒருத்தன் இந்தப் பூமிக் காற்றை சுவாசிச்சுட்டு இருந்தான்னா…. அவனை விடக்கூடாது. பாம்பைப் பார்த்ததுமே நாம எப்படி அதை அடிச்சுக் கொல்றோமோ... அதே மாதிரிதான் அவனையும் அடிச்சுக் கொல்லணும்.
புவனேந்திரன் கோபம், சுபமதியை நடுக்கியது.
“பு…வ…னே…ந்…தி…ர…ன்…!
புவனேந்திரன் திரும்பினான். கோபம் இன்னும் கலையாமல் இருந்தது...
இரண்டாவதாக தளி – ராஜேஷ் குமார் – ஆர்கே பதிப்பகம் – நாவல்