பண்டைத் தமிழ் நூல்கள் அனைத்தும் தம் சமயத்திற்கே புதியவை என்றும், தமிழ்நாட்டுக் கற்படுக்கைகள், காத்தளங்கள் அனைத்தும் சைனத்திற்கே உரியவை என்றும் சொந்தம் கொண்டாடி வருகின்றது சைனம்.
வடநாட்டு சைன சமூகத்தை ஏற்காத தமிழ்நாட்டு அசனர்கள் அண்மைக்காலம் வரை தம்மைத் தனியே அடையாளம் காட்டும் வகையில் சமணர் என்றே அழைத்து வந்தனர். இன்று வடநாட்டு வட்டிப்பணம் தென்னாட்டு செனத்தையும் வளைத்துப் போட்டு விட்ட அவலநிலை.
இந்தச் சூழலில் இதுவரை சமணம் என்ற பெயரில் வசனம் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த நூல்கள், கற்படுக்கைகள், எழுத்துப் பொறிப்புகள் ஆகிய அனைத்தும் மிகு தொன்மையான வாழ்க்கை நெறியான ஆசீவகத்திற்கு உரியவை என்ற உண்மை பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பேரறிஞர் குணா ஆகியோரின் ஆய்வுகளின் வழி நிறுவப்பட்டுள்ளது.
சைன தீர்த்தங்கரர்கள் அனைவரும் வட இந்தியாவைச் சார்ந்த அரசர்களே என்ற சைனரின் கருத்துக்கு மாற்றாக ஆசீவக வாழ்க்கை முறையை சமயமாக உருத்திரட்டிய மற்கலி கோசாலர் தமிழ்நாட்டு வேளிர் குலத்தவர் என்ற உண்மை வேறு வட சைவருக்குக் கசப்பானதாக உள்ளது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.