ராணா ஸங்கன் ஆயுள் முழுவதும் பெரும் சாகஸச் செயல்களைப் புரிந்து, கடைசியில், 80 போர்க்காயங்கள் உடலில் அவன் வீரத்துக்கும் கீர்த்திக்கும் அத்தாட்சி சொல்ல, வீர மரணமடைந்தான். அந்த மகாபுருஷனின் கதையை இந்த ‘மஞ்சள் ஆற்றில்’ எழுதியிருப்பதில் பெருமையடைகிறேன். மக்களும் இதைப் படித்து, “இப்படி ஒரு மகாவீரன் நமது நாட்டில் தோன்றினான்” என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்தக் கதை நூற்றுக்கு நூறு திடமான சரித்திர ஆதாரம் பெற்றது. சரித்திர மாணவர்களுக்கும் பெரிதும் பயன் தரத்தக்கது.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.