“இதெல்லாம் என்ன?
“எது மேடம்…?”
மஞ்சுளா நாயர் படித்தாள்.
“மனைவி இறந்ததற்காக கணவன் கட்டிய வெள்ளைப் புடவை !
குருதேவ் பதட்டத்தோடு குறுக்கிட்டார். “இது ஏதோ ஒரு 'கோட் வேர்ட் மாதிரி இருக்கு மேடம்..... “இன்னொன்னும் இருக்கு.
“படிங்க மேடம்.
“அருகம்புற்களைக் காட்டிலும் நாய்க்குடைகள் அழகானவை.
மஞ்சுளா நாயர் தொடர்ந்தாள்.
“அப்புறம் மூணாவதாய் ஒண்ணு….
“என்ன மேடம்?
“எனக்குப் பிடித்த நிறம் வானவில் இல்லை….”
இப்போது நூருல்லா பரபரத்தார்.
“நோ... டவுட் மேடம்...!
இது எல்லாமே சங்கேத வார்த்தைகள்தான். இந்தப் பெண் நீங்களோ நானோ நினைக்கிற மாதிரி இன்னஸண்ட் கிடையாது….
ராஜேஷ்குமார்
வெல்வெட் குற்றங்கள் – ராஜேஷ் குமார் – ஆர்.கே பதிப்பகம் – நாவல்