“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் காலத்தையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டெடுக்க எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்தின் மையப்புள்ளி. அதை நோக்கிப் பயணிக்க அறிவே கருவி.” – வறீதையா கான்ஸ்தந்தின் >>>முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார். 'கடலம்மா பேசுறங் கண்ணு', 'நெய்தல் சுவடுகள்', 'பழவேற்காடு முதல் நீரோடி வரை', 'மூதாய் மரம்', 'தி சீ டிரைப்ஸ் அண்டர் சீஜி' உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), அம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளனர்.
வேலம்:உறையாடும் தமிழ் நெய்தல் – வரையாய காண்டத்தின் – உயிர் வெளியீடு