பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்களின் வரலாற்றையும், அவர்கள் பரம்பரையைப் பற்றிய விளக்கங்களையும் பண்பாட்டையும், அவர்களுடைய ஆற்றல் மிக்க வீரதீரச் செயல்களையும், தெய்வீகக் கலை ஈடுபாட்டையும் படிக்கப் படிக்கப் பெருமிதம் அடைகின்றோம். பழங்காலப் பெருமைகளை மேலும் மேலும் அறியும் ஆர்வம் நம் உள்ளத்தில் ஏற்படுகின்றது. அதுவும் பிரபல நாவலாசிரியரான திரு. சாண்டில்யன் கைப்பட்டால் – அவருடைய ஒப்பற்ற நடையினால், கற்பனைத்திறனால், பழந்தமிழ் மன்னர்கள் வரலாறுகள் மேலும் ஒளிவீசித் திகழ்கின்றன.
பிரபல நாவலாசிரியர் திரு. சாண்டில்யன் தம் பேனாவினால் கைலாசநாதர் கோயிலைச்சமைத்த பல்லவ ராஜதிலகமான இரண்டாம் நாசிம்மவர்மனின் அற்புதமான வரலாற்றை “ராஜதிலகம்” என்னும் மகோன்னத சரித்திர நவீனமாகப் படைத்துள்ளார்.
காலத்தால் அழியாத கலைக்கோயில்களைக் காஞ்சியிலும் மல்லையிலும் உருவாக்கிய ராஜசிற்பியின் கலையும் காதலும் வீரமும் கலந்த அப்பெரும் வரலாறு வாராவாரம் குமுதம் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தபொழுது லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த ஆவலுடன் படித்து வந்ததை நானறிவேன். நாடே நன்கறியும்.
இந்த நவீனத்தை அழகிய புத்தகமாக்கினால் அனைவருக்கும் என்றும் பயனுள்ள சரித்திரப் பொக்கிஷமாக அமையும் என்ற கருத்தில் வழக்கம் போல் வானதியில் இதனை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளேன்.
பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சரித்திர ஆய்வுகள் நடத்தி இம் மாதிரிப் பழந்தமிழ் மன்னர்களின் வரலாறுகளை – அக்கால மக்களின் மனவியல்புகளை – பண்பாடுகளை – வாழ்க்கை முறையிாை! எல்லாம் சித்திரித்து சரித்திரக் கலைக் களஞ்சியமாக நமக்சத் தரவேண்டும்.
Reviews
There are no reviews yet.