ஷங்கர்ராமசுப்ரமணியனின் வாழ்க்கை குறித்த பார்வை, உள்ளே அருவவெளியில் திளைத்துக் காணாமல் போய்விடவில்லை. அதே சமயம் தினசரி வாழ்வின் ஆழமற்ற தன்மையில் தொலைந்து போய் விடவும் இல்லை. உணர்ச்சிகளின் பாய்ச்சலிலும் சுழிகளிலும் சிக்கிக்கொண்டுவிடாமல், கரையுடைந்து கட்டற்றுப் போய்விடாமல், உள்ளார்ந்த சமநிலையுடன் ஆழமாகவும் சீராகவும் ஓடுகின்றன இந்தக் கவிதைகள்,
வாசிக்கும் போது மனத்தில் சலனத்தை உண்டாக்கி, அந்தச் சலனத்தின் அசைவில் வேறு ஒரு தளத்தை அடைந்து, கவிதை முடியும்போது வேறொரு அமைதியை வந்தடைகின்றன ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள். தன்னுடன் தானே மேற்கொள்ளும் உரையாடலாக இருப்பினும் வாசகனுக்குள்ளேயும் அவன் தன்னுடன் தான் அனுபவம் கொள்ளும் உரையாடலாக மடைமாற்றம் கொள்கின்றன இந்தக் கவிதைகள்.
Reviews
There are no reviews yet.