“நிக்கி… கொஞ்சம் உன்னோட பார்வையை உயர்த்தி நம்ம ரெண்டு பேரோட தலைக்கு மேல என்ன தொங்கிட்டிருக்குன்னு பாரு… நித்திலன், தன்னுடைய விழிகளை உயர்த்திப் பார்த்துவிட்டு “ஒரு பெரிய லஸ்தர் லேம்ப்” என்றான். “என்னோட பார்வைக்கு என்ன தெரியுது தெரியுமா?” “என்ன ?” அரிவாள் “பயப்படறியா?” “பயப்படாமே என்ன பண்றது…. அதிர்ஷ்ட தேவதை ஒரு தடவை ரெண்டு தடவை காப்பாத்துவா… எப்பவும் நம்ம பக்கத்திலேயே இருப்பான்னு நம்பிட்டு இருக்க முடியாது….” “சி.எம். இப்போ ஃபங்ஷனுக்கு வந்துட்டதால இனிமேல் உன்னையும் என்னையும் யாரும் கவனிக்க மாட்டாங்க… நாம அபாயக்கட்டத்தைத் தாண்டிட்டோம்.. சாதுர்யா…” “அப்படீன்னு நீ நினைச்சுட்டு இருக்கே. ஆனா, நீயும் நானும் இன்னமும் அபாயக் கட்டத்துக்குள்ளேதான் இருக்கோம்…
Five Star Throgam – Rajesh Kumar – RK Publishing – Novel