இரவல் சொர்க்கம் ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்டவிரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது.
அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம். இந்த கதையில், உங்கள் அபிமான விவேக்கும் ரூபலா வும் இருக்கிறார்கள். பரபரப்பான கதை… இதோ உங்களால் படிக்கப்பட காத்திருக்கிறது.
ராஜேஷ்குமார் –
Iraval Sorgam – Rajesh Kumar – RK Publishing – Novel