“நாம் நம்ம பொண்ணோட ஜாதகத்தைக் காட்ட வந்தா…. இவர் ஏதோ ஸர்ப்ப ஜாதகம்னு சொல்றார்….”
“பயப்படாதே செல்லம்! ஜோதிட சாஸ்திரங்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. நமக்கு நம்ம பொண்ணு உயிரோடு வேணும், அவ்வளவுதான். அவர் எப்படி ஜாதகம் பார்த்தா என்ன ?”
ஞானவேல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜோதிடரின் உதவியாளர் ஒருவர் பக்கத்து அறையிலிருந்து கூடை ஒன்றை எடுத்து வந்தார்.
பலராமய்யருக்கு முன்பாய் அந்தக் கூடையை வைத்து மெல்லத் திறந்தார்.
உள்ளே சுருண்டு படுத்திருந்த கருநாகம் ஒன்று மெல்லத் தலையை உயர்த்தியது. நிமிர்ந்து உள்ளங் கையின் பரப்பளவுக்குப் படம் எடுத்தது. தன் சிவப்பான மஞ்சள் நிறக் கண்களால் பலராமய்யரையே பார்த்தது.
Aintham Pirai – Adutha Ilakku – Rajesh Kumar – RK Publishing – Novel“நாம் நம்ம பொண்ணோட ஜாதகத்தைக் காட்ட வந்தா…. இவர் ஏதோ ஸர்ப்ப ஜாதகம்னு சொல்றார்….”
“பயப்படாதே செல்லம்! ஜோதிட சாஸ்திரங்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. நமக்கு நம்ம பொண்ணு உயிரோடு வேணும், அவ்வளவுதான். அவர் எப்படி ஜாதகம் பார்த்தா என்ன ?”
ஞானவேல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜோதிடரின் உதவியாளர் ஒருவர் பக்கத்து அறையிலிருந்து கூடை ஒன்றை எடுத்து வந்தார்.
பலராமய்யருக்கு முன்பாய் அந்தக் கூடையை வைத்து மெல்லத் திறந்தார்.
உள்ளே சுருண்டு படுத்திருந்த கருநாகம் ஒன்று மெல்லத் தலையை உயர்த்தியது. நிமிர்ந்து உள்ளங் கையின் பரப்பளவுக்குப் படம் எடுத்தது. தன் சிவப்பான மஞ்சள் நிறக் கண்களால் பலராமய்யரையே பார்த்தது.
Aintham Pirai – Adutha Ilakku – Rajesh Kumar – RK Publishing – Novel