அந்த இரண்டு குரங்குகளோட போஸ்ட்மார்ட்டம் இப்பத்தான் முடிஞ்சது.” பரிப்போர்ட் என்ன சொல்லுது டாக்டர்…?” ”குரங்குகளோட மரணத்திற்கு காரணம் கொஞ்சம் விபரீதமானது…!” ”விபரீதமானதா…!” “குரங்குகளுக்கு ‘ஸ்பைனல் அனஸ்தீடிக்’ கொடுக்கப்பட்டிருக்கு இன்ஸ்பெக்டர். அதாவது அவைகளோட முதுகுத் தண்டுவடங்களில் மயக்க மருந்து ஊசியை போட்டிருக்காங்க…!” ”பொதுவாய் அனஸ்தீசியா, அறுவை சிகிச்சை நடக்குறதுக்கு முந்திதானே கொடுப்பாங்க….?” ”யூ ஆர் கரெக்ட் இன்ஸ்பெக்டர்… இந்த இரண்டு குரங்குகளுக்கும் ஒரு ஆப்ரேஷன் நடந்திருக்கு.” “என்ன ஆப்ரேஷன். ”அது வந்து… கொஞ்சம் அப்நார்மல்…” ”என்ன அப்நார்மல்….?” “குரங்குகளோட இயற்கையான கண்களை எடுத்துட்டு, அதுக்கு பதிலா இரண்டு செயற்கை கண்களை பொருத்தியிருக்காங்க…!’
Kadaisi Theekuchi – Rajesh Kumar – RK Publishing – Novel