Lemuria Enterprises

பறவைகளுக்கு ஊரடங்கு

150.00

SKU: 8078

In Stock

Share:

பறவைகளுக்கு ஊரடங்கு புத்தகம் குறித்து ஏ.சண்முகானந்தம்

வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார்.

சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூரைமாறி (Rosy Starling) குறித்த அனுபவமும், அமூர் வல்லூறு குறித்த கட்டுரையும் இத்தொகுப்பின் முக்கிய கட்டுரையாக அமைந்துள்ளது.

ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமூர் வல்லூறு (Amur Falcon) தமிழகத்தின் கூந்தங்குளம் பகுதிக்கு வலசை வந்த போது, நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் மனதில் நிழலாடிச் செல்கின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய அறிமுகக் கட்டுரைகள் மிகவும் அவசியமாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல மாவட்டங்களில் அதிகளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வாழ்விடத்தை இழந்த சூரைமாறிகள் சென்னையின் கிண்டிக்கருகில் இருந்த ஒரு ஆல, அரச மரத்தில் ஆயிரக்கணக்கானவை கூடியிருந்த அழகை காணும் வாய்ப்பை நூலாசிரியர் பெற்றுள்ளார். அந்த அனுபவத்தை நூலை படிக்கும் வாசகனுக்கும் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

நத்தைக் குத்தி நாரை இரு வேறு கட்டுரைகளில், வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டுள்ளது.

ஆந்தைகள், தேவாங்கு மட்டுமின்றி அந்திப்பூச்சிகளைத் (Moth) தேடியலைந்த அனுபவத்தோடு, மற்றொரு கட்டுரையில் வண்ணத்துப்பூச்சிகளின் உலகத்தில் பயணித்ததையும் நூலாசிரியர் அழகுடன் அனுபவத்தையும் எளிமையான வடிவத்தில் பதிவு செய்கிறார்.

Author

Category

Publication

Format

Paper Back

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!