றெக்கை கட்டி பறக்கும் மனசு
இது வெறும் குளிர் காலம் மட்டுமன்று! இலையுதிர் காலமும் கூட ,இலைகள் உதிர்ந்த கிளைகளில் வந்தமரும் பறவைகளைப்பார்த்தால்… மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு பறவைகளை துளிர்த்துள்ளதோ என்று நினைக்கத் தோன்றும்!
அப்படி நினைக்கத்தோன்றும் கவித்துவ மனதை தொலைத்து விட்டு அவசர வாழ்வில் அனைத்தையும் கடந்து விடுகிறான் மனிதன்!
” குயிலிசை போதுமே … அடக்குயில் முகம் தேவையா..? ” என்று காற்றில் கரையும் திரையிசைப்பாடல் பறவையின் குரலைக்கேட்டாலே போதும்! அதன் முகத்தை, நிறத்தை பார்க்க வேண்டியதில்லை என்கிறது! பறவைகளின் குரல் கேட்டு, முகம் பார்த்து, நிறம் பார்த்து, அதன் வாழ்வறிய பயணப்பட்டவர் மருத்துவர் விக்ரம் குமார்.
-கோவைசதாசிவம்
(சூழலியல் எழுத்தாளர் – ஆவணப்பட இயக்குநர்
Paravaigal Sool Ulagu – Dr.Vikram Kumar – Sutruchoolal – Kakkai Koodu