சித்தர் இலக்கியங்களில் ஆன்மீகமும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகின்றன. ஆயினும் இரண்டுமே அறிவியல் (விஞ்ஞான) அடிப்படையில் அமைந்திருப்பதே சித்தர் இலக்கியங்களின் சிறப்பு.அரிய வேதியல் உண்மைகளை வெளியிடும்பொழுது இயற்கையாகவே சித்தர்களுக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியுள்ளது. இவை நீயவர்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டால் என்னவாகும்? என்று சிந்தித்தபோது அவர்களுக்கு பயமே உண்டாகியிருக்க வேண்டும். அதனாலேயே சித்தர்கள் பலர் தாங்கள் எழுதிய நூல்களைக் கிழித்தெறிந்து விட்டனர். மற்றவர்களையும் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்தினர்.ஒரு காலத்தில் சித்தர்கள் பரிபாஷைச் சொற்கள் அதிகமாக உபயோகப்படுத்தி நூல்களை இயற்றினர். பரிபாஷைச் சொற்களுக்கு விளக்கம் அவர்களே கூறினால் மட்டும்தான் உண்டு, நம்பிக்கையான சீடர்களுக்கு மட்டுமே அந்த விளக்கங்களை அறித்தனர், சிறிது காலம் வரைஅதுவழிவழியாகசீடவர்க்கத்தினர்களிடம்மட்டுமே இருந்து வந்திருக்கலாம். போகர் பரிபாஷைச் சொற்களைக் கையாண்டதோடு மட்டுமல்லாமல் வேறொரு முறையையும் கையாண்டார் என்று சந்தேகிப்பதற்கு இடமுண்டாகிறது. போகர் ஏழாயிரத்தில் உள்ள பாடல்களை ஆராய்ச்சி செய்யும் பொழுது அவற்றில் பல கற்பனையாகவே இருக்க வேண்டும் என்று துணிய வேண்டியதாக உள்ளது. உண்மையையும் கற்பனையையும் கலந்துவிடும் பொழுது உண்மை எது? என்று தெரியாமல் மயங்க வேண்டிய நிலை வருகிறதல்லவா? – ஆராய்ச்சியை மேற்கொள்பவர் உண்மையானவராகவும் மனித சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடையவராகவும் இருந்தால் உண்மையான முறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவார். கெட்ட எண்ணத்துடன் ஆராய்ச்சியில் இறங்குபவர் பல தோல்விகள் ஏற்படும்போது அலுத்துப் போய் விட்டு விடுவார். இதைத்தான் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
போகர் 7000 ஆறாம் காண்டம்
₹100.00
SKU:
10573
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 158 |
Weight | 250 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 158 |
Weight | 250 |
Language |
Be the first to review “போகர் 7000 ஆறாம் காண்டம்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.