போகர் ஏழாயிரத்தில் இரண்டாம் காண்டம் உங்கள் கைகளில் தவழ்கிறது. இது ஆறாவது புத்தகம். இன்னும் ஒரு காண்டம் மட்டுமே பாக்கியுள்ளது. அதுவும் வெகு வேகமாக அச்சாகி வருகிறது. இம்மாத இறுதிக்குள் உங்கள் கைக்கு வந்துவிடலாம்.போகர் ஏழாயிரம் வெளியிடும் முயற்சியைப் பாராட்டி ஏராளமான அன்பர்கள் கடிதங்கள் எழுதியுள்ளனர். பலர் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதியுள்ள கடிதங்களைப் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து டாக்டர் பானு நாடார் என்பவர், ‘தங்கள் சேவை அகில உலகமெங்கும் வாழும் மக்களின் நோய் நொடிகளை அகற்றி நீண்ட நாள் சந்தோஷமாக வாழ வழிகாட்டும் சேவையாகும். ஆகையால் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று நெடிதுயர்ந்து நீடூழி வாழ இறைவன் வழிகாட்டுவாராக’ என்று வாழ்த்துகிறார்.
இப்படி நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் வாழ்த்துக் கூறும் அன்பர்களின் ஆசியே இந்தக் கடினமான முயற்சியில் எங்களுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.தமிழ் மக்களின் ஆதரவு போகரின் மற்ற நூல்களையும், பிற சித்தர்களின் அமரத்துவம் வாய்ந்த நூல்களையூம் வெளியிட உதவி செய்யும் என்று நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.