போகர் ஏழாயிரம் என்ற இந்த நூலின் பெருமையை உணர்ந்து பழனி தேவஸ்தானம் இதை அச்சிட்டு வெளியிட முன் வந்தது. ஆனால் புத்தக வியாபாரத்தை ஒரு கடமையாக ஏற்றுக் கொள்ள விரும்பாததால் புத்தகத்தை வெளியிட்டு தமிழக அரசுக்கு இலவசமாகச் கொடுத்தது.
முதல் மூன்று ஆயிரம் பாடல்கள் மூன்று புத்தகங்களாக வெளிவந்தன. கழக ஆட்சி மாறியதும் அம்முயற்சி நின்றுவிட்டது. அதன் பின் பல ஆண்டுகள் அம்முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
எனவே நான்காவது ஆயிரம் முதலாகத் தாமரை நூலகத்தின் வாயிலாக வெளியிடுவது என்று துணிந்தேன். எனக்கேற்பட்ட சோதனைகள் ஏராளம். முதலாவதாக மூல நூலின் பிரதியே அகப்படவில்லை .
பல ஆண்டுகளுக்கு முன் மூர் மார்க்கெட்டில் திருவள்ளுவர் புத்தக நிலையத்தில் போகர் ஏழாயிரம் ஒரு பிரதியை என்னிடம் கொடுத்து “இதை வாங்கி வையுங்கள். உங்களுக்கு உபயோகமாகும் ” என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அப்போது எனக்கு மனம் வரவில்லை. அன்று பதினைந்து ரூபாய்க்கு கிடைப்பதாக இருந்த இந்நுலின் ஒரு பிரதிக்காக நான் சில ஆயிரம் ரூபாய்கள் வரை செலவிட நேர்ந்தது. புத்தகம் வைத்திருந்தவர்கள் கொடுக்க முன்வரவில்லை. விலை சொன்னவர்கள் நெருங்கிப் போனவுடன் மேலும் மேலும் விலையை உயர்த்தினார்கள். மணலி, காஞ்சிபுரம், வேலூர், கோவை என்று பல ஊர்களுக்கு அலைந்ததுதான் மிச்சமாயிற்று.
Reviews
There are no reviews yet.