அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டெலிபோன் கனைத்து கூப்பிட்டது. மூன்று பேரும் முகம்மாறி ஒருத்தரை யொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். “இந்நேரத்துக்கு போன் பண்ணுவது யாராக இருக்கும்…?” “நீலேஷ்! நீ ரிஸீவரை எடு…” நீலேஷ் ரிஸீவரை எடுத்து “ஹலோ” என்று குரல் கொடுக்க, மறுமுனையில் ஒரு குரல் சிரித்தபடி கேட்டது. “யாரு நீலேஷா…?” “ஆ…ஆமா. நீ யா…யாரு….” “நான் ஒரு எழுத்தாளன். புதுசா இப்பதான் ஒரு கதை எழுதி முடிச்சேன். கதைக்கு தலைப்பு என்ன தெரியுமா…?”
“என்னன்னு கேட்க மாட்டியா…? சரி… நானே சொல்றேன். தலைப்பு இதுதான் ‘நள்ளிரவில் ஒரு தகனம்’. தலைப்பு எப்படியிருக்கு…” “டே…டேய்… நீ யாரு…?” “நான் யார்ன்னு நீயும் உங்க அம்மாவும் உன்னோட ஃபேமிலி டாக்டரும் தெரிஞ்சுக்க விரும்பினா நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு நானே கெஸ்ட்ஹவுஸுக்கு வர்றேன்” “டொக்…” ரிஸீவர் பெரியதொரு சத்ததுடன் வைக்கப்பட்டு விட்டது.
50Kg Tajmahal – Abaya Noiyali – Rajesh Kumar – RK Publishing – Novel