தமிழ்மொழியின் தனிச் சிறப்பைப் புலப்படுத்துவதிலும், தமிழ் இனத்தின் அறிவுத் திறனை உலகறியச் செய்வதிலும் மிகுந்த ஆர்வமுடையவராய், விரிந்த கல்வியும், ஆழ்ந்த புலமையும், தெளிந்த சிந்தனையும் கொண்ட உயர்ந்த ஆய்வாளராக விளங்கும் பேராசிரியர், முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள், “சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும்” என்ற இந்தச் சீரிய செந்தமிழ் ஆய்வுப் பனுவலைப் படைத்தளித்துள்ளார்.
அவர் தம் ஆய்வுப் பணியின் பயனாக, இதற்கு முன்னதாக, தமிழ் இனத்தின் தொன்மை வாழ்வில் முகிழ்த்த இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தனித்தன்மையுடைய ‘சமயம்’ எனலாகும் கருத்துக்களையும், ‘வாழ்க்கை ‘ பற்றிய கோட்பாடுகளையும், சான்றுகள் தந்து விளக்கிடும் பலவற்றை வரைந்தளித்த பெருமைக்குரியவர்.
Reviews
There are no reviews yet.